கும்பகோணம், டிச.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவரும் விடு தலை போராட்ட வீரருமான தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினத்தையொட்டி அவர் வாழ்ந்த இடமான வேப்பத்தூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செங்கொடி ஏற்றி அவரது உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.நீலமேகம், ஆர்.மனோ கரன், அருளரசன், சிஐடியு மாவட் டத் தலைவர் என்.கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர் ஜீவ பாரதி, மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன், கும்பகோணம் நகரச் செயலாளர் செந்தில்குமார் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர் இதனை தொடர்ந்து திருவிடை மருதூர் கட்சி அலுவலகம் முன்பு உள்ள பி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் கும்பகோணம் சிபிஎம் மாநகர குழு சார்பில் தோழர் பி.ஆர். உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.