திருவில்லிபுத்தூர் நகர்மன்றத் தேர்தலில் 5-ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்கம் ரவி கண்ணன் புதனன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவுன்சிலராக பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு நகராட்சி ஆணையாளர் மல்லிகா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
திருவில்லிபுத்தூர் நகர் மன்ற 7-ஆவது வார்டில் வென்ற திமுக முத்து கிருஷ்ணகுமார் என்ற ராஜா மான்சிங் புதனன்று நகராட்சி அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு நகராட்சி ஆணையாளர் மல்லிகா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.