சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் 31 ஆவது வார்டில் போட்டியிட்டு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் நகர்க்குழு முன்னாள் துணைத்தலைவர் பூமிநாதன் வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு சிஐடியு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு செயலாளர் கே ஆர்.அழகர்சாமி, மற்றும் சிஐடியு பொறுப்பாளர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.