பொதுவுடமை கொள்கையாளர், தொழிற்சங்கவாதி, இந்திய விடுதலைப் போராளி என்ற பன்முகத்தன்மைக்கு சொந்தக்காரரான சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் நினைவு தினம் கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. மணக்குடி பகுதியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாவட்டத் தலைவர் கே.அலெஸ்சண்டேர், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் (சிஐடியு) மாநிலப் பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, எஸ்.தங்கம், செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.