விருதுநகர், நவ.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராகவும் திறம்பட செயல்பட்டவர் தோழர் பி.சீனிவாசன். அவரின் 17-ஆம் ஆண்டு நினைவு தினம் விருதுநகர் வி.வி.ஆர் பூங்கா அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மூத்த தலைவர் எஸ்.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எல்.முருகன் வர வேற்றார். சமூக ஆர்வலர் எம்.ஊர்காவலன், மூத்த தலை வர் தேனிவசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் சிறப்புரை யாற்றினார். இதில், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஜெய பாரத், செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.