சென்னை, ஜன.17- தமிழகத்தில் இருக்கும் முன்னணி ஜீ தொலைக்காட்சி சேனல் ஒன்றில் குழந்தைகள் சம்பந்தமான ரியாலிட்டி ஷோ-வில் நாட்டின் யதார்த்தங்களை நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளனர். ரியாலிட்டி ஷோ நகைக்சுவை இதுதான்:-”கருப்புப் பணத்தை எங்கே ஒழித்தார். கலர் கலரா கோட்டு மாட்டிக்கிட்டு சுத்தினாரு”. “அயல்நாடுகளிடம் முன்பு அடிமையாக இருந்தோம். இப்போது அயல்நாட்டு நிறுவனங்களிடம் அடிமையாக இருக்கிறோம்”. நமது ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? நாம் ஆட்சியில் இல்லாமல் இருந்தால் மக்கள் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்”. லாபத்தில் உள்ள நிறுவனங்களை ஏன் விற்கிறீர்கள். நஷ்டத்தில் உள்ளதை விற்றால் எப்படி லாபம் வரும். லாபத்தில் உள்ளதை விற்றால் தான் லாபம் என அந்த நகைச்சுவை காட்சி செய்தி சொல்கிறது. குழந்தைகளின் நகைச்சுவையை ரசிக்கத் தெரியாத பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நகைச்சுவை மோடியின் மாண்பை குறைப்பது போல் உள்ளது. அந்தச் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாய்ந்துள்ளார்.