வெம்பக்கோட்டை, டிச.17- ஓய்வு பெற்ற பள்ளி- கல்லூரி ஆசிரியர் நலச் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக் கிளையின் சார்பில் 10 ஆவது ஓய்வூதி யர் தின விழா மற்றும் மாவட்ட மாநாடு வெம்பக்கோட்டையில் நடைபெற்றது. வெம்பக்கோட்டையில் மீனாட்சி திரு மண மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கா.சிவ பெருமான் தலைமை தாங்கினார். தேசியக் கொடியை மாநிலச் செயற்குழு உறுப்பினர் நா.ஸ்ரீராமன் ஏற்றி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் ம.இராஜகோபால் முன்னிலை வகித்தார். மாவட்டச் செய லாளர் இரா.சஞ்சீவிப்பாண்டியன் வர வேற்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் க.சி.மனோ கரன் துவக்கவுரையாற்றினார். 75 வயது நிறைந்த உறுப்பினர்களைப் பாராட்டி சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன் சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் ச.தங்கவேல் சிறப்பு அழைப்பாளர்களை கௌர வித்தார். “ஓய்வூதியர் நலனில் கருவூலத்தின் பங்கு“ என்ற தலைப்பில் சிவகாசி கருவூல அலுவலர் சித்ரா, “ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள்“ என்ற தலைப்பில் பாரத ஸ்டேட் வங்கி மேலா ளர் ஜோதி, “ ஓய்வூதியர்கள் பாக்கிய வான்கள்“ என்ற தலைப்பில் சித்த மருத்து வர் சிவ.கதிரவன் ஆகியோர் கருத்துரை யாற்றினர். பின்பு நடைபெற்ற மாவட்ட மாநாட்டை மாநிலத் தலைவர் கோ.முரளீதரன் துவக்கி வைத்துப் பேசினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் இராமசுப்புராஜ், அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சந்திரராஜன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். முன்னாள் மாவட்டச் செயலாளர் ச.வேல்சாமி நிறைவுரை யாற்றினார். முடிவில் மாவட்டப் பொரு ளாளர் இரா.புகழேந்தி நன்றி கூறினார். மேலும் இதில், மாவட்ட, வட்டார நிர்வா கிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர்.