districts

img

மதுரையில் கல்லூரிப் பேராசிரியர்கள் தர்ணா

மதுரை, மார்ச் 17-  கல்லூரிப் பேராசிரியர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வந்த பணி மேம்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 5 நாள் 11.01.2021 ஐ உடனடியாக அமல்படுத்தவேண்டும்.  பல்கலைக்கழக மானியக் குழு வழி காட்டுதல் மற்றும் அரசாணை எண்- 5- இன் படி கல்லூரி ஆசிரியர்களுக்கு முனைவர் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் .  அரசாணை எண்- 5- இல் உள்ளபடி கல்லூரி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் பதவி உயர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மதுரை மண்டல மூட்டா சார்பில் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு அருகில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு மண்டலம் (1)  தலைவர் ரமேஷ் ராஜ் தலைமையில்  வியாழனன்று தர்ணா  நடைபெற்றது மண்டலம் (2) தலைவர் தர்மலிங்கம், மண்டலம் (2) செயலாளர் பெரியசாமி ராஜா, மதுரை மண்டலப் பொருளாளர் ஏ. டி, செந்தாமரைக்கண்ணன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், பிஜிடிஏ நிர்வாகி ரவிச்சந்தின், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.