இராமநாதபுரம், ஆக.8- மகளிர் சுய உதவிக்குழுக் களின் உற்பத்திப் பொருட் களை நேரடியாக விற்பனை செய்ய ஏதுவாக மகளிர் திட் டம் சார்பில் செய்யது அம் மாள் கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் கல்லூரி சந்தை திட்டத்தை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலு வலர் (வாழ்வாதாரம்) சோ.ந. அழகப்பன், மேலாளர் எஸ். தங்கபாண்டியன் உள்ளிட்ட வர்கள் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கல்லூரி சந்தையில் இராமநாதபுரம், மதுரை, திரு நெல்வேலி, விருதுநகர் மற் றும் சிவகங்கை மாவட்டங்க ளைச்சேர்ந்த 22 கடைகளில் மகளிர் சுய உதவிக்குழு வினர் கலந்து கொண்டு கை வினைப்பொருட்கள், பேன்சி பொருட்கள், சிறு தானிய உணவு பொருட்கள், பாசி மணி மாலைகள், சணல் பைகள், பனை ஓலைப்பொருட் கள், கடல் சிப்பி அலங்கா ரப்பொருட்கள், சேலைகள், சுடிதார்கள், நைட்டிகள், கீ செயின், பொம்மைகள் போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக் கண்காட்சியினை கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வ முடன் கண்டு களித்து பொரு ட்களை வாங்கி மகளிர் சுய உதவிக்குழுவினரை ஊக கப்படுத்தினர்.