விருதுநகர், ஜூலை 24- விருதுநகர் அருகே மேலாமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.மீனாட்சிபுரம் கிராமத்தில் தரமின்றி சமு தாய சுகாதார வளாகம் கட் டப்பட்டுள்ளது. எனவே, அக்கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி ஒன்றியம், மேலாமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது எம்.மீனாட்சி புரம் கிராமம். இங்கு 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொது மக்கள் வசிக்கும் பகுதியின் அருகே சுகாதார வளாகம் இல்லை. மேலும், தனிநபர் கழிப்பறை கட்டவும் இங்குள்ள பெரும் பாலான வீடுகளில் வசதிகள் இல்லை. இந்தநிலையில், எம்.மீனாட்சிபுரத்தில், தூய்மை இந்தியா திட்டம் (கிராமம்) 2020-21, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தித் திட்டம் மற்றும் 15 வது நிதிக்குழு ஆகியவை ஒருங் கிணைந்து சமுதாய சுகா தார வளாகம் கட்டப்பட்டுள் ளது. இதன் மொத்த மதிப் பீடு ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து எம்.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பொது மக்கள் கூறுகை யில், இந்த சுகாதார வளாக மானது, மிகவும் தரமின்றி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சுகாதார வளாகத்தில் மேற் கூரை கான்கிரீட் இன்றி தக ரத்தால் அமைக்கப்பட்டுள் ளது. செப்டிக் டேங்க் குழாய் கள் சரிவர பொருத்தவில்லை. இதனால், காற்று வீசினால் ஆடும் நிலையில் உள்ளது. மேலும், கட்டிடமும் உறுதித் தன்மையின்றி உள்ளது. கழிப்பறைக் கதவுகளும் மிக வும் மோசமாக உள்ளது. இந்த சமுதாய சுகாதார வளா கம் கட்டி முடிக்க ரூ.5 லட் சத்து 25 ஆயிரம் எனில் இது மிகவும் அதிகமான தொகை யாகும். விதிமுறைப்படி இக் கட்டிடம் கட்டப்பட்டதாக தெரியவில்லை என்று தெரி வித்தனர். இதுகுறித்து, மேலா மத்தூர் ஊராட்சிமன்ற உறுப்பினர் செல்லம் கூறு கையில், எஸ்.பி.எம்(ஜி) திட் டத்தின் நோக்கமே, திறந்த வெளிக் கழிப்பிடத்தை இல்லாமல் செய்வதுதான். ஆனால், இந்தக் கட்டிடம், பொதுமக்கள் சென்று பயன் படுத்த முடியாத இடத்தில் ஊரைவிட்டு மிகவும் தூரத் தில் கட்டப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பெண்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல முடி யாது. ஏனெனில் அங்கு தெரு விளக்கு வசதி கூட கிடை யாது. எனவே திறந்த வெளி யையே பொது மக்கள் தொடர்ந்து பயன்படுத்தும் நிலை தற்போது வரை நீடிக்கிறது. மேலும், இக்கட்டி டம் தரமின்றியும் கட்டி முடிக் கப்பட்டுள்ளது. இதில் மிகப் பெரிய முறைகேடு நடை பெற்றுள்ளது. எனவே, இக்கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு செய்து ஊழ லில் ஈடுபட்ட அரசு அதிகாரி கள், அலுவலர்கள் மற்றும் கட்டிடத்தை தரமின்றி கட் டிய ஒப்பந்தகாரர் ஆகி யோர் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.