districts

மதுரை முக்கிய செய்திகள்

திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடல்   ஆட்சியர் உத்தரவு

விருதுநகர்,ஜன.13 திருவள்ளுவர் தினமான ஜனவரி 16 மற்றும்  குடி யரசு தினமான ஜனவரி 26 அன்றும் விருதுநகர் மாவட் டத்தில் உள்ள அனைத்து மது பானக் கடைகளையும் மூட வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது: விருதுநகர் மாவட்டத் தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மது பான சில்லறை விற்பனைக் கடைகள் எப்,எல் 1. எப் எல்2.3. 3ஏ மற்றும் மதுபான உரிம ஸ்தலங்கள் அனை த்தும்  திருவள்ளுவர் தின மான ஜனவரி 16 அன்றும் குடியரசு தினமான ஜனவரி 26 அன்றும் தற்காலிகமாக மூடப்படும்.இந்த  உத்தர வினை மீறி செயல்படும் டாஸ் மாக் நிறுவனப் பணியாளர் கள் மற்றும்  உரிமதாரர்களின் மீது நடவடிக்கை மேற் கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

நெசவாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது

ஆண்டிபட்டி, ஜன.13- கூலி உயர்வு கோரி ஆண்டிபட்டி அருகே நெசவாளர்கள் 12 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதி களில் உள்ள   நெசவுத் தொழிலாளர்களின்  கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் கோரி  கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர் கள் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் ஆகி யோருக்கு இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.  இதனால் 12 ஆவது நாளாக ஜனவரி 13 அன்றும் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை கோட்ட ரயில்வே வருமானம் 80 சதவீதம் அதிகரிப்பு

மதுரை, ஜன. 13-  மதுரை ரயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 80.67 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பயணிகள் வருமானம் ரூ. 280.80 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 78 சதவீதம் அதிகரித்து ரூபாய் 502.05 கோடியாக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ரூ.191.44 கோடியாக இருந்த சரக்கு போக்குவரத்து வருமானம் 27 சதவீதம் அதிகரித்து இந்த ஆண்டில் ரூ.242.60 கோடியாக உயர்ந்துள்ளது. மதுரை கோட்டத்தில் ரயில்களில் கடந்த ஆண்டில் 9.2 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். இந்த ஆண்டு பயணிகள் எண்ணிக்கை 24.1 மில்லியனாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரூ.654.41 லட்சம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு  பயணச்சீட்டு இல்லாத, பயணிகள் ரயில்களில் வர்த்தக பயன்பாட்டு சரக்குகள் கொண்டு சென்ற, ரயிலில் புகை பிடித்த, ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்திய பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ. 834.12 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில்களில் 21,358 டன் சரக்குகளும், சரக்கு ரயில்களில் 2.20 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளன என்று மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த   16 பேர் கொண்ட குழு அமைப்பு

மதுரை, ஜன. 13-  உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவின்படி மதுரை அவனியா புரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமுதாய பிரதிநிதி கள் 16 நபரை உள்ளடக்கிய ஆலோ சனைக்குழு அமைக்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக் கட்டு போட்டியை அனைத்து தரப்பி னரும் இணைந்து நடத்தகோரிய  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கின் உத்தரவில் அவனியா புரம் அனைத்து சமுதாய மக்களை யும் இணைத்து  சமாதான கூட்டம் நடத்த வியாழனன்று உத்தரவிடப் பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோட்டாட் சியர் பிரதௌஸ் பாத்திமா தலை மையில் வெள்ளியன்று சமாதான கூட்டம் காலை 11மணிக்கு தொடங்கி மதியம் 1மணிக்கு முடிவடைந்தது.  இந்த கூட்டத்தின் முடிவில் அவ னியாபுரம் கிராமத்தின் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் 16 நபரை உள்ளடக்கிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இவர்கள் அவ னியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோச னைகளை வழங்கலாம் எனவும், இதேபோன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப் படையில், ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில்  இயங்கி வரும் 9 உறுப்பினர்கள் கொண்ட அரசுத் தரப்பு ‘ஜல்லிக்கட்டு ஏற் பாட்டு குழு’வில் 10வது நபராக மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சேர்க்கப்பட்டுள்ளதாக வும் முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து சமாதான கூட்டம் முடிவடைந்து இரு தரப்பி னரும் வெளியவந்த போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற் பட்டது.

பொங்கல் பண்டிகை: இராமநாதபுரத்திற்கு  சிறப்பு ரயில்கள் இயக்கிடுக கே.நவாஸ் கனி எம்.பி., கோரிக்கை

இராமநாதபுரம்,ஜன.13- பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு இராமநாத புரம் மாவட்டத்திற்கு சென்னை மற்றும் பெங்களூ ரில் இருந்து சிறப்பு ரயில் கள் இயக்க வேண்டும் என்று இராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, தெற்கு ரயில்வே பொது  மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள கோரிக்கை வருமாறு: இராமநாதபுரம் மாவட் டத்தைச் சார்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நகரங்கள் மற்றும் வெளி யூர்களில் பணியாற்றி வரு கின்றனர். இவர்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊரு க்கு வருவதற்கு சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கிட தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சென்னை எழும்பூரில் இருந்து இராமேஸ்வரம் வரையிலும் பெங்களூரு வில் இருந்து சேலம் வழி யாக இராமேஸ்வரம் வழி யிலும் இரு மார்க்கமும் சிறப்பு ரயில்கள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.