விருதுநகர், மே 16- விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையின் அருகே மேற்கு பாண்டியன் காலனி முதல் பாவாலி விலக்கு வரை அணுகுசாலை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற் பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, அங்கு உடனடியாக அணுகுசாலை அமைக்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டிக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். இதையடுத்து, அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்த ஆட்சியர், உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் அணுகுசாலை அமைக்க வேண்டுமென இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநருக்கு கடிதம் அனுப்பி வைத் துள்ளார். அந்த கடிதத்தில் கூறியதாவது: விருதுநகர் சத்திரரெட்டியபட்டி விலக்கு முதல் ரயில்வே மேம்பாலம் வரையுள்ள 4 வழிச்சாலையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு இடையே மேற்கு பாண்டி யன் காலனி முதல் பாவாலி விலக்கு வரை அணுகுசாலை இல்லை. இதனால், மேற்கு பகுதியில் உள்ள எரிச்சநத்தம், செங்குன்றா புரம், பாவாலி, குந்தலப்பட்டி, சீனியாபுரம், பாவாலி, எல்கைபட்டி, சந்திரகிரிபுரம், வட மலைக்குறிச்சி, மீனாட்சிபுரம், சிவஞான புரம், பாப்பாகுடி, சின்னமூப்பன்பட்டி, கலை ஞர் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் 4 வழிச் சாலையை கடக்க முடியவில்லை. இதனால், வேறு வழியின்றி எதிர்திசையில் பயணித்த காரணத்தால் விபத்து ஏற்பட்டு பல மனித உயிர்கள் பலியாகியுள்ளன. எனவே, காவல்துறையினர், இரும்புத் தகடுகள் வைத்து வாகனங்களை திருப்பி விடுகின்றனர். இதனால், சாதாரண உழைப் பாளி மக்கள் பல கி.மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கூடுதலான செலவு செய்ய வேண்டியுள்ளது. அதேநேரத்தில் பல மாவட்டங்களில் நகர் பகுதியில் 4 வழிச் சாலையோரத்தில் அணுகு சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், விருதுநகரில் மட்டும் பலமுறை மனுக் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, மேற்படி மனுதாரரின் கோரிக்கை குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப் பிட்டுள்ளார்.