districts

img

திருவில்லிபுத்தூர் தேரோட்டம்: அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ஆட்சியர் உத்தரவு

திருவில்லிபுத்தூர்,ஜூலை 22- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிபூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுவதை யொட்டி அதன் ஏற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை  அலுவலர்களுடன் ஆட்சியர் மேகநாதரெட்டி  ஆலோ சனை நடத்தினார்.         அப்போது ஆட்சியர் கூறுகையில், கட்டுப்பாட்டு அறை அமைத்து  பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க வேண்டும். தேரை சுற்றி 4 துணை காவல் கண்கா ணிப்பாளர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். நான்கு ரத வீதிகளிலும் குறுக்கே உள்ள மின் வயர்களை அகற்ற வேண்டும். தேரோட்டத்திற்கு  ஒரு  மணி நேரம் முன்பாக மின்சாரத்தை நிறுத்த வேண்டும். அதிக மக்கள் வருவார்கள் என்பதால் பேருந்து நிலை யத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும். பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஆம்பு லன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால உதவிகள் தாயார் நிலையில் இருக்க வேண்டும் என அதிகாரி களுக்கு ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிகண்ணன், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், துணை கண்காணிப்பாளர் சபரிநாதன், வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன், வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, உதவி ஆணையர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை  தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.