திருச்சுழி, நவ.7 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே சவ்வாசு புரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், ரூ.9.72 லட்சத்தில் வகுப்பறைகள் புனரமைக்கப்பட்ட பணிகளை பார்வையிட்டு, அங்குள்ள பொது நூலகத்திற்கு சென் றார். பின்பு, அங்குள்ள பதிவேடுகள், புத்தகங்களை ஆய்வு செய்தார். பின்பு, குள்ளம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.48 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.23.28 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலு வலக கட்டிடம், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் ரூ.13.65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதையடுத்து, ம.ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் பிரசவ அறை, சித்த மருத்துவ பிரிவு, பல் மருத்துவப்பிரிவு, மருந்துகளின் இருப்பு ஆகிய வற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் உட்பட பலர் இருந்தனர்.