districts

img

இராஜபாளையத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

இராஜபாளையம், ஜூன்.1-

    இராஜபாளையம் நக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார்.

    இராஜபாளையம் ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி முதல் திருவ னந்தபுரம் ஊரணி வரை ரூ.80 இலட்சத்தில் அமைக் கப்பட்ட தார்ச்சாலை, சங்க ரன்கோவில் சாலையில்  ரூ. 148.80 இலட்சத்தில் கட்டப் பட்டு வரும்  நவீன எரிவாயு தகன மேடை,   காமராஜர் நகரில்  ரூ.7.80 இலட்சத்தில்  கட்டப்பட்ட பொது சமைய லறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர்  நேரில் ஆய்வு செய்தார்.

   அப்போது,  பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறி வுறுத்தினார். இந்த ஆய்வின் போது,  நகராட்சி பொறியாளர் எம்.ரத்தினவேல், வட்டாட்சியர்  ராம சந்திரன், இளநிலை பொறியா ளர்  கோமதிசங்கர் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.