districts

img

தென்காசி மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்க ரூ.1141 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தென்காசி,நவ.30- தென்காசி  மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி  ஸ்ரீ சாரதாம்பா கிராண்ட் மஹாலில்  குறு, சிறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையத் தின் மூலம்  மாவட்ட அளவிலான முதலீடுகள் மாநாடு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச் சந்திரன் தலைமையில் நவம்பர் 30 அன்று நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். பழனிநாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மரு.சதன்திரு மலைக்குமார்  (வாசுதேவ நல்லூர்), ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாநாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில்,  தென்காசி மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்க 78 தொழில் நிறுவ னங்கள் சார்பில் ரூ.1141 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை யில் வரும் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடை பெறவுள்ளது.  இது குறித்து தொழில் நிறுவனங்கள் தொழில் முனைவோர் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையிலான மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு  நடைபெற்று வருகிறது.  இந்நிகழ்ச்சியில்  தொழில் முத லீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு

57 நபர்களுக்கு ரூ.148.04 இலட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளா தார மாநிலமாக விளங்கிவரும் தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டா ளர்கள் சந்திப்பின் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற  முதல மைச்சரின்; தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவது இம்மாநாட்டின் முதன்மை நோக்க மாகும். மேலும், ‘மீள்திறனுடன், நீடித்து நிலைக்கத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி“ ஆகும்.  சென்னையில் வருகிற ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் உலக முத லீட்டாளர்கள் மாநாடு நடைபெற வுள்ளது.  இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க வழிவகை ஏற்படும்.  படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவதுடன் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழகம் சிறந்து விளங்கும்.  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை யொட்டி ரூ.1092 கோடிக்கான தொ ழில்சார் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தென்காசி மாவட்டத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  இதுவரை ரூ.1141 கோடிக்கு தொழில் தொ டங்கும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  இதன் மூலம் தென்காசி மாவட்டத்தில் 3847 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக் கும்.  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களு க்கு விரைவாக ஒற்றை சாளர தகவு இணையதளம் வாயிலாக கட்டிட வரைபட ஒப்புதல், தொழிற் பேட்டை ஒதுக்கீடு பெற விண்ணப்பங்கள் மற்றும் தொழிலக உரிமம்  மற்றும்அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் தென்காசி மாவட்ட மானது விவசாயத்திற்கு அடுத்த படியாக தென்னை நார் சார்ந்த தொழில்கள் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்புகள்  ஆகியவற்றை முக்கிய தொழிலாக கொண்டுள் ளது. தென்காசி மாவட்டத்தின் இயற்கை சூழல், புதியதாக தொழில் தொடங்கும் நிறுவனங்க ளுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும். தென்காசி மாவட்டத்தில் நிலவும் மூலப்பொருள்களின் வளம், உள்கட்டமைப்பு,  திறமை வாய்ந்த பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப் படும் முக்கியத்துவம், வணிக ரீதி யான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வோர்க்கு சிறந்த வாய்ப்பு களை வழங்குகிறது.

தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் முதலீட்டு மானியம், மின் மானியம், கட்டண மானியம், தரச்சான்றிதழ் மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்களை அரசு வழங்குகிறது.  இத்தகைய வாய்ப்பு களை பயன்படுத்தி தென்காசி மாவட்டத்தில் புதிய பல தொழில் களை தொடங்க வருமாறு தொழில் முனைவோர்களை கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில்  மாவட்ட தொழில் மைய, பொது மேலாளர் ப.மாரியம்மாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தி.உதய கிருஷ்ணன், தென்காசி நகர்மன்றத்  தலைவர் ர.சாதிர், நகர்மன்றத் துணைத்தலைவர் கே.என்.எல். சுப்பையா, தென்காசி ஒன்றியக்  குழுத்தலைவர் எம்.ஷேக் அப் துல்லா, இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.சின்னத்தாய், இலஞ்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.முத்தையா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெ.சண்முகவடிவு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)  ரா.ராமசுப்பிரமணியன் மற்றும்  மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனச் சங்கத் தலைவர் செ.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.