நாகர்கோவில், மே 19- கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழ னன்று (மே 19) நடந்தது. ஆட்சியர் மா.அரவிந்த் தலை மை தாங்கினார். வேளா ண்மை இணை இயக்குநர் சத்ய ஜோஸ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் வசந்தி உள்ளிட்ட அதிகாரி கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வேளா ண்மை உழவர் நலத்துறை சார்பில் ‘குமரி இதழ்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை ஆட்சியர் அர விந்த் வெளியிட விவசாயிகள் பெற்றுக் கொண்டனர். இந்த புத்தகம் அனைத்து விவசாயி களுக்கும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட் டத்தில் விவசாய பிரதிநிதி கள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு அதிக மாக உள்ளது. தனியார் கடை களில் யூரியா உரம் அதிக விலைக்கு விற்பனை செய் யப்படுகிறது. எனவே இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்-அமைச்சரின் உழவர் பாது காப்பு திட்டத்தின் கீழ் விவ சாயிகளுக்கு அட்டை வழங்க வேண்டும். இரணியல் அருகே குளத்தில் கழிவுநீர் கலப் பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன சானல்களை பலப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும். பேச்சிப்பாறை அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பேயன்குழி பகுதி யில் நடந்து வரும் இரட்டை கரை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த னர். பதில் அளித்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கூறிய தாவது: குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வரு கிறது. மே மாதத்தில் இது வரை சராசரியாக 45.9 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள் ளது. ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சராசரியாக 341.31 மீட்டர் மழை பெய்துள் ளது. விவசாயத்திற்கு தேவை யான விதைகள் இருப்பு உள் ளது. இந்த வார இறுதிக்குள் 500 டன் யூரியா உரம் இறக்கு மதி செய்யப்பட உள்ளது. தனியார் கடைகளில் உரங்க ளின் விலைப்பட்டியலை வெளியே வைக்கு மாறு கூறி உள்ளோம். அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய் தால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். பொதுப் பணித்துறை சார்பில் ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டு வரு கிறது. இ-சேவை மையம் மூலமாக உழவர் அட்டை பெற விண்ணப்பிக்கலாம். கிள்ளியூர் வேளாண் துறை அலுவலகத்தில் புகார் செய்யப்பட்ட ஊழியர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். குளங்கள் மற்றும் கால்வாய் களில் கழிவுநீர் கலக்கும் இடங்களை கான்கிரீட் போட்டு மூட வேண்டும். பேயன்குழி பகுதியில் நடந்து வரும் இரட்டைக் கரை சானலில் சீரமைப்பு பணிகள் செப்டம் பர் மாதத்திற்குள் முடிக்க பபடும். பேச்சிப்பாறை அணையை தூர்வார திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள் ளது என கூறினர். கூட்டத்தில் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.