திண்டுக்கல், ஜுன் 21- கொப்பரை தேங் காய்க்கு கட்டுப்படியான விலை வழங்கக் கோரி ஜுலை 12 ஆம் தேதி மாவட் டம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப் போவதாக தென்னை விவசாயிகள் சங்க திண்டுக் கல் மாவட்ட பேரவை அறி வித்துள்ளது. தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட பேரவை பழனியில் புத னன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பிச்சைமணி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ். கிருஷ் ணன் வரவேற்றார். மாநி லத்தலைவர் கே.மதுசூத னன், மாநிலப் பொதுச்செய லாளர் ஏ.விஜயமுருகன் ஆகியோர் சிறப்புரையாற் றினர். தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.பெருமாள், மாவட்டச்செயலாளர் எம்.ராமசாமி, பொருளாளர் ஆர். தயாளன் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். திண்டுக்கல் மாவட்டத் தில் நிபந்தனையின்றி கொப் பரை தேங்காயை கிலோ ஒன் றுக்கு ரூ.140க்கு கொள் முதல் செய்ய வேண்டும். கேரள மாநிலத்தைப் போல கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 வழங்க வேண்டும். தேங்காய் எண் ணெய்யை விவசாயிகளிட மிருந்து நேரடியாக கொள் முதல் செய்து பொதுமக்க ளுக்கு ரேசன் கடைகள் மூலம் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை சார்ந்த தொழில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும். விவ சாயிகளுக்கு உரம், பூச்சி மருந்து மற்றும் இயந்தி ரங்களை முழு மானியத்து டன் வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. (நநி)