திருநெல்வேலி, டிச. 21- அம்பாசமுத்திரம் நகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு தொழி லாளர்கள் பணி செய்து வரு கிறார்கள் .இந்த தொழிலா ளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுப்படி தினசரி சம்பளம் ரூபாய் 411 வழங்குவதற்கு பதிலாக ரூ.355 மட்டுமே வழங்கப்படு கிறது. எனவே தொழிலாளர்க ளுக்கு மாவட்ட ஆட்சித்தலை வர் உத்தரவுப்படி தினசரி சம்பளம் ரூபாய் 411 வழங்க வேண்டும். தொழிலாளர்க ளிடம் பிடித்தம் செய்யப்படக் கூடிய ஈபிஎப் ,ஜிபிஎப் ,வங்கி கடன், சொசைட்டி கடன் ஆகியவற்றிற்கு பிடித்தம் செய்யக் கூடிய பணம் முழுமையாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் செலுத் தப்பட வேண்டும் ,தொழிலா ளர்களின் குடியிருப்புகளை சரிசெய்து தொழிலாளர்கள் பாதுகாப்பாக குடியிருப்ப தற்கு ஏற்பாடு செய்ய வேண் டும், மேலும் வேலை செய்வ தற்கான உபகரணங்கள் பாதுகாப்பு உபகரனங்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் நக ராட்சி தூய்மை தொழிலாளர் கள் வேலை நிறுத்தம் செய்து காத்திருப்பு போராட் டத்தை நடத்தினர். போராட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் ஆர். மோகன், துணை செயலாளர் சுரேஷ், சங்க நிர்வாகிகள் சுடலையாண்டி இசக்கி ரான் ஜெகதீஸ் கணேசன் குமார் உட்பட பலரும் போராட் டத்தில் கலந்துகண்டனர் .