districts

img

தூய்மையான விமான நிலையங்கள் மதுரைக்கு முதலிடம் -சு.வெங்கடேசன் எம்.பி

தூய்மையான விமான நிலையங்களில் மதுரை முதலிடம் பெற்றுள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம் இன்று ஆலோசனைக்குழுத் தலைவர் மாணிக்கம்தாகூர் எம்.பி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்கப்பணிகள் குறித்து மிக விரிவாக விவாதிக்கப்பட்டது.

24 மணி நேரமும் இயங்கும் தன்மையில் சர்வதேச விமான நிலையமாக மதுரையை மாற்றுவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்துவது என்றும், தேவை ஏற்படின் அதுகுறித்து தென்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானத்துறை அமைச்சரை நேரில் சந்திப்பது என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தற்போது 95 சதவிகித நிலமெடுப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நிர்நிலை வகைமாற்றம் குறித்து தமிழக அரசு உத்தரவுகளை வெளியிட வேண்டிய தேவை உள்ளது. எனவே தமிழக அரசு அதனை விரைவுபடுத்த வேண்டுகிறோம்.

விமான நிலையத்தின் விரிவாக்கத்தில் புதியதாக 5 விமான நிறுத்துமிடங்களும், 2 ஹெலிபேட்களும், ஒரு கூடுதல் பயணிகள் பாதையும் இணைக்கப்பட்டு வாகன நிறுத்தம் உள்ளிட்டு பேருந்து வசதிகள் அனைத்தும் சிறந்த முறையில் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்தியாவின் 34 விமான நிலையங்களில் தூய்மையான விமான நிலையங்களில் முதலிடத்தையும் , அதேபோல பயணிகளின் சேவைத்தர மதிப்பீட்டில் இந்திய விமான நிலையங்களில் 4வது இடத்தையும் மதுரை விமான நிலையம் பெற்றுள்ளது. அதற்காக மதுரை விமான நிலையத்தின் அதிகாரிகளை பாராட்டினோம்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், காவல்துறை அதிகாரி தங்கதுரை. விமான நிலைய அதிகாரி பாபுராஜ், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் & அதிகாரிகள் பங்கேற்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது