districts

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கம்

சென்னை, பிப்.14- தமிழகம் முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.  முதலாம் ஆண்டு மாண வர்களுக்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரு கின்றன. புதிதாக கல்லூரிக்கு வந்த மாணவர்களை பேராசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கலந்தாய்வில் பங்கேற்று  சேர்க்கைக்கான ஆணை களை பெற்ற மாணவர்கள் பிப்ரவரி 16-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர அறி வுறுத்தப்பட்டுள்ள நிலை யில், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வகுப்புகளுக்கு வந்தனர். மாணவர்கள் அனை வரும் உடல் வெப்ப பரிசோத னைக்கு பிறகே வகுப்பறைக் குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, வகுப்புகளை நடத்தவும், ஏழரை சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் கட்ட ணம் ஏதும் வசூலிக்கக் கூடாது எனவும் உத்தர விடப்பட்டுள்ளது.