districts

img

சிஐடியு உழைக்கும் பெண்கள் பேரவை

மதுரை, செப்.10-  சிஐடியு உழைக்கும்  பெண்கள் ஒருங்கிணைப் புக்குழு  மதுரை மாநகர் மாவட்ட  பேரவை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் பா.  பழனியம்மாள் தலைமை யில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.  சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.மகாலட்சுமி  சிறப்புரையாற்றினார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் இரா. தெய்வராஜ் வாழ்த் திப்பேசினார். பேரவையில் 17 பேர் கொண்ட ஒருங்கி ணைப்புக்குழு தேர்வு செய் யப்பட்டது. கன்வீனராக ஜே. லூர்து ரூபி தேர்வு செய்யப் பட்டார்.  கேரள மாநிலத்தைப் போல்  ஜவுளிக்கடை மற்றும் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் அமர்வதற்கு இருக்கை அமைத்துக் கொடுக்க வேண்டும். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மக்  களுக்கு முதலுதவி அளித் திட மருத்துவர்களை நிய மித்திட வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

;