இராமநாதபுரம்,ஏப்.20- இராமநாதபுரம் சட்டமன்றத் தொகு திக்குள் இயங்கும் 32 டாஸ்மாக் கடைகளை யும் அகற்றி முன்மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பி னர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் டாஸ் மாக் கடை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் எழுதியது போல் நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் குரல் எழுப்ப வேண்டும் .முதல் கட்டமாக உடனடி யாக பள்ளி மாணவர் விடுதி அருகில் மற்றும் விவசாய நிலங்கள், கோவில் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் வழி அருகே உள்ள திருப்புல்லாணி டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி வியாழனன்று சிஐடியு இராமநாதபுரம் மாவட்டக்குழு சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. திருப்புல்லாணி டாஸ்மாக் கடை முன்பாக பெண்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் முற்றுகையிட தயாராயினர் .இந்நிலை யில் வட்டாட்சியர், காவல்துறை அதிகாரி கள் பேச்சு வார்த்தைக்கு அழைத்துப் பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் எம். சிவாஜி, மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்ட நிர்வாகிகள் தனுஷ்கோடி, வி.பாஸ்க ரன், டி.ராஜா மற்றும் வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர் ஆகியோருடன் கீழக்கரை யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது .
பின்னர் பேச்சுவார்த்தை குறித்து சிஐ டியு மாவட்ட செயலாளர் சிவாஜி கூறுகையில், நம்முடைய கோரிக்கைகளின் நியாயத்தை அதிகாரிகள் உள்வாங்கிக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக உடனடியாக வியாழனன்று மாலையே மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மாநில முழு வதும் அகற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள முதல் 500 டாஸ்மாக் கடைகளில் அதி லும் முன்னுரிமையாக ராமநாதபுரம் தொகு திக்குட்பட்ட கடைகள் அகற்றப்பட மாவட்ட நிர்வாக வழிகாட்டுதல்படி கண்டிப்பாக நட வடிக்கை எடுப்போம் என வட்டாட்சியர் மற் றும் காவல் துறை அதிகாரி சிஐடியு நிர்வாகி களிடம் உறுதியளித்துள்ளனர் இது தொடர் பான பேச்சுவார்த்தை ஏப்ரல் 27 அன்று நடை பெறுகிறது என்று தெரிவித்தார் . போராட்டத்தில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் எம். அய்யா த்துரை, மாவட்ட நிர்வா கிகள் ஏ. சுடலைக்காசி ,எம்.கருணாமூர்த்தி, கே.பச்ச மால், என்.பி. செந்தில், எஸ் பிரான் சிஸ் மற்றும் தனியார் வாகன ஓட்டுநர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த் ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகி முனியசாமி டாஸ்மாக் ஊழி யர் சங்க நிர்வாகி நம்புராஜன் உள்பட திர ளானோர் பங்கேற்றனர்.