மதுரை, மே 27- தொழிலாளர் நலக் கோரிக்கை களை முன்வைத்து நடத்தப்பட்டு வரும் சிஐடியு நடைபயணத்திற்கு மதுரை மாநகர் மற்றும் புறநகரில் சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட் டது. நடைபயண வரவேற்பு பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. சிஐடியு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் பைக்காரா வில் நடைபயண வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் மதுரை மாநகர் மாவட்ட செயலா ளர் டி. அறிவழகன் தலைமை வகித்தார். நடைபயணக்குழு தலை வர் எஸ். ராஜேந்திரன், சிஐடியு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் இரா.தெய்வராஜ், மாவட்டச் செய லாளர் இரா.லெனின் ஆகியோர் விளக்கிப் பேசினர். மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மதுரை ஜீவா நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆவின் முகவர் சங்கம் தலைவர் எஸ்.ஆர். பாலாஜி தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பால பாரதி சிறப்புரையாற்றினார். சிஐ டியு மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையா, அப்பளத்தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பால முருகன்,கட்டுமான சங்க தலைவர் ஏ.குருசாமி ஆகியோர் பேசினர்.
மதுரை புறநகர்
சிஐடியு மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் உசி லம்பட்டியில் நடைபயண வர வேற்பு பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் தலை மையில் நடைபெற்றது. மின் ஊழி யர் மத்திய அமைப்பின் புறநகர் மாவட்ட பொருளாளர் ஆர். சுரேஷ் குமார் வரவேற்றார். பய ணக்குழு தலைவர்கள் எஸ்.ராஜேந் திரன், பயணக்குழு கன்வீனர் பி.என்.தேவா ஆகியோர் விளக்கிப் பேசினர். மாணவர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் கே.பிருந்தா, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டத் தலைவர் திருமுருகன், மாவட்ட செயலாளர் சி.செல்வ ராஜ், சிஐடியு மாவட்ட பொருளா ளர் ஜி.கௌரி வாழ்த்திப் பேசினர். விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர் சிறப்புரையாற்றினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் உசிலம்பட்டி கோட்ட செயலாளர் வி.பி. நாகநாதன் நன்றி கூறினார். பேரையூரில் நடைபெற்ற வர வேற்பு நிகழ்ச்சிக்கு ஆர்.சீனி வாசன் தலைமை வகித்தார். விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.உமா மகேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பா.ரவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எம்.கல்லுப்பட்டியில் நடை பெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு பெ. ராஜா சங்கர் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் டி.ஏ.இளங்கோவன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி.கெளரி ஆகியோர் பேசினர். எழுமலையில் ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகி என்.ஜெயபால் தலைமை வகித்தார். பயணக்குழு வின் சிஐடியு தென்காசி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் விளக் கிப் பேசினார்.
சிவகங்கை
சிஐடியு நடைபயணத்திற்கு சிவ கங்கை, காளையார்கோவில், தேவ கோட்டை, காரைக்குடியில் திரளா னோர் வரவேற்பு அளித்தனர். சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மணியம்மா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, போக்குவரத்து கழக சிவகங்கை பணிமனை கிளை செயலாளர் சம யத்துறை, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் உமாநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். தேவகோட்டையில் நான்கு இடங்களில் வரவேற்பு கொடுத்தனர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்ககிளைச் செயலாளர் தியாகராஜன், கிளைத் தலைவர் ராமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். காரைக்குடியில் சிஐடியு மாவட்டதுணைத் தலை வர் அழகர்சாமி, மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைச்செயலாளர் அழகர்சாமி, மாவட்ட பொருளாளர் தட்சிணா மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். காளையார்கோவிலில் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, விவ சாயிகள் சங்க மாநில பொதுச்செய லாளர் சாமி.நடராஜன்,மாநில துணைத் தலைவர் முத்துராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.