விருதுநகர், ஜூலை 12- தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் துப்புரவு பணி மற்றும் பிற பணிகளை அவுட்சோர்சிங் எனப்படும் கொத்த டிமை முறையை கொண்டு வந்துள்ளது. இதற் கென 152,139,115 ஆகிய அரசாணைகளை வெளி யிட்டுள்ளது. இந்த ஆணைகளை திரும்பப் பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன படி 10 ஆண்டுகள் பணி செய்த அனைவரை யும் நிரந்தரப்படுத்த வேண்டும். 1996இல் உரு வாக்கப்பட்ட பணி விதிகளை திருத்தம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஜூலை 12 புதன்கிழமை யன்று சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடை பெற்றது. ஏராளமானோர் கைது செய்யப்பட்ட னர். விருதுநகரில் நகராட்சி பகுதியில் 5 துப்புரவு பிரிவுகளிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இத னால்,சுகாதாரப் பணிகள் முற்றிலும் முடங்கிப் போனது. இதையடுத்து, நகராட்சி அலுவலகம் முன்பு கன்வீனர் வி.பாலமுருகன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட் டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட உதவித் தலை வர் ஜி.வேலுச்சாமி, சிபிஎம் நகர் செயலாளர், எல். முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.விஜய பாண்டி ஆகியோர் பேசினர். இதையடுத்து மறி யலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டையில் எஸ்.தமிழ்செல்வ ராஜ் தலைமையில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் எம்.அசோகன், மாவட்ட இணைச் செயலா ளர் ஆர்.பாலசுப்பிரமணியன், சிபிஎம் நகர் செய லாளர் எஸ்.காத்தமுத்து, மாவட்ட உதவித் தலை வர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர். சாத்தூரில் ஏ.சீனிவாசன் தலைமை வகித் தார். பட்டாசு தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் எம்.சி.பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பி னர் மனோஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சிவகாசியில் பி.பால்ராஜா தலைமை வகித் தார்.சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, மாவட்ட பொருளாளர் வி.ஆர்.செல்லச் சாமி, மாவட்ட உதவித் தலைவர் கே.முருகன், சிபிஎம் நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார், கன்வீனர் இ. பழனி உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.
திருவில்லிபுத்தூரில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் சாராள் தலைமை வகித் தார். மாவட்ட துணைத்தலைவர் பிச்சைகனி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீரசதானந்தம், கட்டுமான சங்க நகர செயலாளர் மரிய டேவிட் ஆகியோர் பேசினர். வாழ்த்தி பேசினார். இராஜபாளையத்தில் சிஐடியு நகர கன் வீனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிஐடியு பஞ்சாலை சங்க மாவட்ட பொதுச் செய லாளர் கணேசன், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் பேசினர். சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற மறியலுக்கு கைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர் தலைமை தாங்கி னார். சிஐடியு மாநில துணைத்தலைவர் மகா லட்சுமி பேசினார். மாவட்ட துணை தலைவர் ஆர்.எம்.மாரியப்பன் கைத்தறி சங்கத் தலைவர் மருது வைரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திரு வள்ளுவர் சிலை அருகில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.தெய்வராஜ் தலைமையில் மறி யல் நடைபெற்றது மாவட்டச் செயலாளர் இரா. லெனின் துவக்கி வைத்துப் பேசினார். கட்டு மான தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செய லாளர் சி.சுப்பையா, மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ம.பால சுப்பிரமணியம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் சிஐடியு மாவட்டப் பொருளா ளர் ஜே. லூர்துரூபி, மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் கருப்பசாமி உள்பட ஏராளமா னோர் கைது செய்யப்பட்டனர்.
தேனி
தேனி மாவட்டம், கூடலூரில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.ஜெயன் தலைமை வகித்தார். மாவட்ட பொரு ளாளர் கே.பழனிவேல், மாவட்ட துனை தலை வர்கள் வி.மோகன், எஸ்.பொம்மையன், விவ சாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி ஜெயராஜ் ஆகி யோர் பேசினர். மாவட்ட செயலாளர் டி. ஜெய பாண்டி நிறைவு செய்து பேசினார். சங்கத்தின் கிளை நிர்வாகிகள் காமாட்சி, பிரியா, மகேந்தி ரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
பழனி
பழனி தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் நடைபெற்றது. சங்க மாவட்ட துணைச் செயலாளர் பி.மாரியப்பன், மாநில பொதுச் செய லாளர் கே.ஆர். கணேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினர் பேரா. சோ,மோகனா ஆகியோர் பேசினர். சங்க செயலாளர் வீராச்சாமி மற்றும் தூய்மை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.