தென்காசி, ஜன.20- தென்காசி நகரத்தில் திடீர் மர்ம காய்ச் சல், தலைவலி, கை கால் வலி, ஜலதோஷம் போன்ற காரணங்களால் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் உடனடி யாக கோவிட் கொரோனா டெஸ்ட் சென்டர் முக்கிய பகுதிகளில் அமைத்திட நட வடிக்கை எடுத்திட கோரி சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.வேல்முருகன் வலியுறுத்தி யுள்ளார். சிஐடியு தென்காசி மாவட்டச் செயலாளர் எம்.வேல்முருகன் மாவட்ட ஆட்சித் தலை வருக்கு மனு ஒன்று அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் தென்காசி நகரம் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக உள்ளது. தற்போது அதிகமான மக்களுக்கு திடீர் மர்ம காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், கை கால் உளைச் சல் அதிகமான சோர்வு ஏற்பட்டு வருகிறது. ஆனால் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எவ்விதமான கோவிட் டெஸ்ட் சென்டரும் செயல்படவில்லை. ஒரு பகுதி செயல்படுவதாக சொல்வதும் லேப் டெக்னீசியன் இல்லாத காரணத்தினால் வரும் மக்களுக்கு எவ்வித டெஸ்டும் செய் யப்படவில்லை. பல நேரங்களில் ஆளில் லாத கோவிட் டெஸ்ட் சென்டராகவே செயல் படுகிறது.
மலையான் தெரு ஆரம்ப சுகா தார நிலையத்திலும் கோவிட் டெஸ்ட் எடுக்கப்படுவதில்லை. தடுப்பூசி மட்டும் போடப்படுகிறது. தினசரி நூற்றுக்கணக் கான பொதுமக்கள் கொரோனா டெஸ்ட் எடுப்பதற்கு அலைக்கழிக்கப்படுகிறார்கள். மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை யில் உள் நோயாளிகளுக்கு மட்டும் கோவிட் கொரோனா டெஸ்ட் செய்யப்படுகிறது கடந்த காலங்களில் தென்காசி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலை யம், மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கோவிட் டெஸ்ட் சென்டர் செயல்பட்டு தொடர்ந்து மக்களிடம் செக்கப் செய்து வந்தார்கள். தற்போது எந்தவிதமான டெஸ்டும் எடுக்கப்படாமல் தினசரி ஆயி ரக்கணக்கான மக்கள் திடீர் மர்ம காய்ச்ச லால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் தென் காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையிலும் தென்காசி சுற்று வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போது மான வசதிகள் செய்யப்படவில்லை. எனவே தமிழக அரசு, மாவட்ட நிர்வா கம் உடனடியாக தலையிட்டு அதிகமான லேப் டெக்னீசியன் மற்றும் சுகாதார பணி யாளர்கள் மூலம் தென்காசி நகரத்தின் சுற்று வட்டார பகுதிகளில் கோவிட் டெஸ்ட் சென்டர் மற்றும் கோவிட் தடுப்பூசிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற தகுந்த நடவடிக்கைகள் விரைந்து எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனு வில் கூறப்பட்டிருந்தது.