திருவாரூர், டிச.21 - திருவாரூர் வட்டத்தில் மாங்குடி, அலி வலம், தப்பளாம்புலியூர் ஆகிய ஊர்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவ சாயிகளால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செய லாளர் டி.முருகையன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுப்பியுள்ளார். அதில், திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதிகாரிகள் மழையைக் காரணம் காட்டி விவசாயிகளிடம் முழு மையாக நெல் மூட்டைகளை பெறாமல் கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டனர். அதனால் பல கொள்முதல் நிலையங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இதனால் நெல்லின் தரம் கேள்விக்குறி யாகி தங்களின் நெல்லை கொள்முதல் செய்யாமல் அரசு கைவிட்டு விடுமோ என்று விவசாயிகள் கவலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக கொள்முதல் நிலையங் களை செயல்பட வைத்து அனைத்து விவசாயி களின் நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தினை பாது காத்திட வேண்டுமென கேட்டுக் கொண்டு உள்ளார்.