விருதுநகர், டிச.8- சாத்தூர் அருகே உள்ள எட்டூர் வட்டம் சுங்கச் சாவடி நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித் தும், தொழிலாளர்கள் ஆட் குறைப்பு செய்தல் கூடாது. இடமாற்றம் செய்வதை கைவிடக் கோரியும் சாதிய பாகுபாட்டுடன் பேசும் மேலா ளர் பிரவின்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி யும் சிஐடியு சாலைப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்.ஆர்.நகரில் நடை பெற்ற இப்போராட்டத்திற்கு கிளைத் தலைவர் கருத்த பாண்டி தலைமையேற்றார். கணேஷ்பாபு, காமராஜ், மன் மதகுமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். துவக்கி வைத்து சாலைப் போக்கு வரத்து சங்க மாவட்ட செய லாளர் எம்.திருமலை பேசி னார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட உதவித் தலைவர் எம்.சி.பாண்டியன், மாவட் டக் குழு உறுப்பினர் எஸ்.மனோஜ்குமார், சாத்தூர் கன்வீனர் ஏ.சீனிவாசன் ஆகி யோர் பேசினார். முடிவில், சிஐடியு மாவட்ட பொருளா ளர் வி.ஆர்.செல்லச்சாமி கண் டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.