districts

img

நலவாரிய பயன்களை முறையாக வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

மதுரை, ஆக. 5-  முறைசாரா தொழிலாளர் நலவாரிய அலு வலகத்தில் ஆன்லைன் சர்வர் தடையின்றி  செயல்பட வேண்டும். தீபாவளி சிறப்பு நிதி  ரூ.5 ஆயிரம் முறைசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கான பென்சன் ரூ3 ஆயி ரம் உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான வாரிய முடிவுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு மதுரை மாநகர் சார்பில் எல்லீஸ்நகர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தையல் சங்க பொதுச் செயலாளர் பி. சித்ரா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட  பொருளாளர் ஜே. லூர்துரூபி துவக்கிவைத்து  பேசினார், சாலையோர வியாபாரிகள் சங்க  பொதுச் செயலாளர் எஸ். சந்தியாகு, ஜென ரல் சங்க பொதுச் செயலாளர் சிவபெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். சிஐடியு மாவட்ட தலைவர் இரா. தெய்வ ராஜ் நிறைவுரையாற்றினார்.