சிவகங்கை, மார்ச் 28- காரைக்குடி அருகே பள்ளத்தூர் டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயக்கும்பலால் பெட்ரோல் குண்டு வீசியதில் விற்பனையாளர் அர்ஜுனன் கொல்லப்பட்டார். இதற்கு தூண்டுதலாக செயல்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு டாஸ்மாக் தொழிலாளர் சங் கம் சார்பாக காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மன மகிழ் மன்றம் என்ற பெயரில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு தனியார் மதுபானங்கள் விற்பனை செய்ய அனு மதிக்க கூடாது. சிவகங்கை மாவட்டம் முழுதும் தனியா ருக்கு சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதை தடுக்க வேண்டும். ஊழியர்களின் உயிர்கள் மீது அக்கறை யற்ற டாஸ்மாக் மாவட்ட மேலாளர், உதவி மேலாளர் ஆகி யோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களை உயிர்களை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் வீரையா தலைமை வகித்தார். சம்மேளன மாநில பொதுச் செயலா ளர் திருச்செல்வன், சிஐடியு மாவட்ட செயலாளர் சேது ராமன்,மாநில துணைப் பொதுச் செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் குமார் மற்றும் மாவட்ட நிர்வாகி கள் பேசினர்.