districts

img

தூய்மைப் பணியில் அவுட்சோர்சிங் முறையை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜன.7-  தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி தூய்மைப் பணியை அவுட்சோர்சிங் என்ற பெயரில் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை வாபஸ் பெறக் கோரி சிவகங்கை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரையா தலைமை வகித்தார். இதில், சிஐடியு பொது தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் வேங்கையா, நகராட்சி ஊழியர் சங்க தலைவர் தங்கராசு, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தி சட்ட சமூக பாதுகாப்பை வழங்கிட வேண்டும், கொரோனா காலத்தில் முன் களப் பணியாளர்களுக்கு வழங்கிய ரூ.15 ஆயிரத்தை சிவகங்கை நகராட்சி தொழிலாளிக்கு உடனடியாக வழங்கிட வேண்டும், நிரந்தர தொழிலாளிகளிடம் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை சொசைட்டிக்கு செலுத்தாமல் நிதி குளறுபடி செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்களை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.