மதுரை, பிப்.13- மதுரை மாநகராட்சி 96 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் என்.விஜயாவுக்கு ஆதரவாக இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மதுரை புறநகர் மாவட் டக்குழு சார்பில் வாக்கு சேக ரிக்கப்பட்டது. இதில், சிஐடியு மாவட்ட நிர்வா கிகள் பொன்.கிருஷ்ணன், ஜி. கௌரி, எஸ்.எம்.பாண்டி, என். காளிராஜன், நல்.மூர்த்தி, மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி. பாண்டியன், பி.மகாலெட்சுமி உள் பட பலர் கலந்துகொண்டனர். இராஜபாளையம் இராஜபாளையம் நகர் மன்ற உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 18வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செந்தமிழ்செல்வனுக்கு ஆதர வாக சிஐடியு சார்பில் வாக்கு கேட்டு பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சிஐடியு கன்வீனர் சுப்பிரமணியன் தலை மை தாங்கினார். சிஐடியு பஞ்சா லைத் தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கணே சன், விருதுநகர் மாவட்ட கூட்டு றவு ஊழியர் சங்க தலைவர் முனி யாண்டி, சாலைப் போக்குவரத்து சங்க மாவட்ட நிர்வாகி கண் ணன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பாலசுப்பிர மணியம், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சன்னாசி, தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சோமசுந்த ரம், மாநில குழு உறுப்பினர் முனி யாண்டி, ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கம் முத்தையா, கட்டுமான தொழிலா ளர் சங்கம் கதிரேசன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.