districts

img

சிஐடியு உறுதிமொழி ஏற்பு

மதுரை, ஜன.27- சிஐடியு சார்பில் 73வது குடியரசு தினத் தன்று (ஜனவரி 26) உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மதுரை புறநகர் பகுதிகளில் நடை பெற்றது.  திருமங்கலத்தில் சிஐடியு சங்க பொதுச் செயலாளர் எம்.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுச் செயலா ளர் மெட்டல் சங்கம் கே.தவுடன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மின்வாரியா பொறியாளர் சங்கம் கே.ஜீவானந்தம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.செல்லக்கண்ணு ஆகியோர் சிறப்புரை யாற்றினர். சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் உறுதிமொழி முன் மொழிந்தார்.  திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிஐடியு சங்க மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.எம்.பாண்டி தலைமை வகித்தார். தேசிய கொடியை ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி எஸ்.தினகரமோகன் ஏற்றினார்.  மேலூரில் மாவட்டத் தலைவர் செ.கண்ணன், தாலுகாத் தலைவர் எஸ்.பி. மணவாளன், தாலுகாச் செயலாளர் வி.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிழக்கு தாலுகா நரசிங்கத்தில் சிஐடியு தலைவர் நல்.மூர்த்தி தலைமை வகித்தார். தேசிய கொடியை மாவட்டத் துணைத் தலை வர் வி.பிச்சைராஜனும், சிஐடியு கொடியை நல்.மூர்த்தியும் ஏற்றினர்.