districts

img

நீதிமன்றம் உத்தரவிட்ட அகவிலைப்படி உயர்வு எங்கே?

கோவை, நவ.22- 7 வருடங்களாக வழங்கப் படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க கோரி சிஐடியு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் செவ்வா யன்று தமிழகம் முழுவதும் போக்கு வரத்து கழக தலைமை பணிமனை யை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.  போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் களுக்கு நீதிமன்ற தீர்ப்பு அடிப் படையில் அகவிலைப்படி உயர்வு  வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற மரணமடைந்த ஊழியர்களுக்கு ஓய்வு கால பலன் களை வழங்க வேண்டும். ஒப்பந்தப் படி ஓய்வூதியத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது வெறும் கையுடன் வீட்டிற்கு அனுப்பக்கூடாது. ஒப்பந்த நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். கொரோனா கால நிவாரணம் வழங்கிட வேண்டும். காலிப் பணி யிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த முற்றுகை போராட்டம்  நடைபெற்றது.

சிஐடியு கோவை மாவட்ட அரசு  போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் மேட்டுபாளையம் சாலை யில் உள்ள அரசு போக்குவரத்து  தலைமை பணிமனை முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு மண்டல தலைவர் வேளாங்கன்னிராஜ் தலைமை தாங்கினார். இதில், பொதுச்செயலாளர் எம்.பரம சிவம், பொருளாளர் ஆர்.கோபால்,  சிஐடியு மாவட்ட தலைவர் கே. மனோகரன், பொருளாளர் ஆர். வேலுசாமி, மின் ஊழியர் மத்திய  அமைப்பின் தலைவர் கோபால கிருஷ்ணன், அரசு போக்குவரத்து ஒய்வு பெற்றோர் நல அமைப்பின்  நிர்வாகி அருணகிரி உள்ளிட் டோர் உரையாற்றினர். இப்போ ராட்டத்தில், கோவை, நீலகிரி  மாவட்டத்தில் இருந்து திரளான அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர். 

சேலம்

சேலம் ராமகிருஷ்ணா சாலை யில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு  நடைபெற்ற முற்றுகை போராட் டத்திற்கு சங்கத்தின் கோட்டத் தலைவர் செம்பான் தலைமை தாங்கினார்.  இதில் சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதயகுமார், மண்டல  பொதுச்செயலாளர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் சேகர், துணை பொது செயலாளர் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் உள் ளிட்ட எண்ணற்றோர் பங்கேற் றனர்.

ஈரோடு

இதேபோன்று, ஈரோடு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு மண்டல தலைவர் கே.மாரப்பன் தலைமை வகித்தார். பொது செயலாளர் ஜான் கென்னடி, ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஜெயராமன், ஜெகநாதன் மற்றும் என்.முருகையா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி பொது மேலாளர் அலுவலகம் முன்பு சிஐடியு போக்கு வரத்து கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் முரளி உட்பட  திராளானோர் கலந்து கொண் டனர்.