districts

img

சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் பேரணி

மதுரை, ஜூலை 27-   15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை யை  உடனே துவக்கி உரிய காலத்தில் அமல்  படுத்த வேண்டும். ஒப்பந்த முறையை கை விட்டு புதிய பணி நியமனம் செய்ய வேண்டும். வாரிசு வேலைகளை வழங்கிட வேண்டும் போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு அரசு போக்குவரத்து மதுரை தொழிலா ளர் சங்கம் சார்பில் வியாழனன்று  பேரணி  நடைபெற்றது. மதுரை  காளவாசல்  சொக்கலிங்க நகரில்  இருந்து அரசு  தலைமையகம் நோக்கி  நடை பெற்ற பேரணியை சிஐடியு மாவட்டச் செயலா ளர் இரா.லெனின் துவக்கி வைத்தார். அரசு  போக்குவரத்து தலைமையகம் முன்பு சங்க தலைவர் பி. எம். அழகர்சாமி தலைமை யில் வாயிற்கூட்டம் நடைபெற்றது. பொதுச்  செயலாளர் ஏ. கனகசுந்தர், துணைத் தலை வர் ஜி.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தொழி லாளர்கள் நலச் சங்க செயலாளர் ஆர். வாசு தேவன் ஆகியோர் உரையாற்றினர். சங்க  பொருளாளர் டி. மாரியப்பன் மற்றும் ஏரா ளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர். முன்  னதாக போக்குவரத்து கலைவாணர் கலைக்  குழு சார்பில் திறவுகோல் என்ற நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.