districts

img

பள்ளி சீருடை தைப்பதற்கான கூலியை 5 சதவீதம் உயர்த்தி வழங்கிடுக!

மதுரை, அக்.11-  மகளிர் தையல் கலை ஞர்களுக்கு இலவச பள்ளி சீருடை தைப்பதற்கான கூலி யை ஆண்டுதோறும் 5 சத வீதம் உயர்த்தி வழங்கிட வேண்டும். தையல் கூட்டு றவு பெண் உறுப்பினர்களி டம் பிடித்தம் செய்த சிக்கன சேமிப்பிற்கான வட்டி வழங் கிட வேண்டும். இலவச பள்ளி  சீருடை தைக்கும் உறுப்பி னர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும் உள்  ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு தையல் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மதுரை மாநகர், புறநகர் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திரு வள்ளுவர் சிலை அருகில் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் பி. சித்ரா தலைமை வகித்தார். சங்கத்தின் புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் பொன் ராஜ், மாநகர் மாவட்ட தலை வர் ஜி.மோகன், சிஐடியு புற நகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருதுநகர்  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பிச்சைக்கனி தலைமை வகித்தார். மாவட்  டச் செயலாளர் எம்.சாராள்  துவக்கி வைத்தார். சிஐடியு  மாவட்டச் செயலாளர் பி.என். தேவா, மாவட்டப் பொருளா ளர் பானுப்பிரியா, ஆர்.முரு கேஸ்வரி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்  டச் செயலாளர் ஞானசேக ரன் தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர்  எம்.சிவாஜி, மாவட்டத் தலை வர் எஸ்.ஏ.சந்தானம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.