தேனி, மே 10- தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் பேரூராட்சி அலுவலகம் அருகே ஏற்றப்பட்ட சிஐடியு கொடி, தகவல் பலகை ஆகிய வற்றை அகற்றி அராஜகத்தில் ஈடுபட்ட திமுக வைச் சேர்ந்த பேரூராட்சி முன்னாள் தலை வர் குணசேகரனின் அராஜகத்தை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு அமைப்பு சார்பில் தேவதானப் பட்டி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொடி ஏற்றப்பட்டு, தகவல் பலகை திறக்கப்பட்டது .கடந்த மே தினத்தன்று செங்கொடி ஏற்றப்பட்டது. இதனை பொறுக்காத திமுக பிரமுகர் குண சேகரன் என்பவர் கொடி கம்பத்தையும், தக வல் பலகையும் அகற்றி அராஜகத்தில் ஈடு பட்டுள்ளார். காவல் நிலையத்தில் சங்கத்தின் சார்பில் புகார் கொடுத்ததும் மனுவை பதிவு செய்ததோடு நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறார்கள். திமுக பிரமுகரின் அராஜகச் செயலை கண்டித்தும் ,காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பொம்மையன் தலைமை வகித்தார் .மாவட்ட பொருளாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார். சிஐ டியு மாவட்ட செயலாளர் எம்.ராமச்சந்திரன் கண்டன உரையாற்றினர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி, மார்க் சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எம்.வி. முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், பிரேம்குமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சு.வெண்மணி.சிஐடியு நிர்வாகிகள் கணேசன். மன்னர் மன்னன், குரு சாமி, சின்னமனூர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.