districts

img

ஆட்டோ ஒட்டுநர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் - டீசல்

திருநெல்வேலி, மே 22- நெல்லை மாவட்டம் களக்காட் டில் ஞாயிற்றுக்கிழமை சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் 9 ஆவது மாவட்ட மாநாடு நடை பெற்றது. முன்னதாக சிஐடியு சங்க கொடி யை கதிரவன் ஏற்றி வைத்தார், தொடர்ந்து பேரணி நடைபெற்றது. பேரணி களக்காடு பஜார் வழியாக மாநாடு நடக்கும் மண்டபத்தை வந்த டைந்தது. மாநாட்டிற்கு சிஐடியு ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட தலை வர் டி.காமராஜ் தலைமை தாங்கி னார்.  துணைத் தலைவர் நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக் குழு செயலாளர் முகமது மைதீன் வரவேற்று பேசினார், சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார், சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.முருகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழ்  நாடு ஆட்டோ சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சிவாஜி சிறப்பு ரையாற்றினார். மாநாட்டில் வரவேற்பு குழுத் தலைவர் பூலுடையார், சிஐடியு மாநில குழு உறுப்பினர் பெருமாள், வழக்கறி ஞர் ராஜசேகரன், வரவேற்புக் குழு  புரவலர் சிவசாமி, சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மரிய ஜான் ரோஸ், கட்டுமான சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.  மாநாட்டில் மாவட்டத் தலைவராக நடராஜன், பொதுச் செயலாளராக ஆர்.முருகன், பொருளாளராக வலதி பெருமாள் மற்றும் 15 துணைத் தலை வர்கள், 15 துணைச் செயலாளர்கள் உட்பட 83 கொண்ட மாவட்டக் குழு  தேர்வு செய்யப்பட்டது.  ஆட்டோ தொழிலாளர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்; ஆட்டோ தொழிலாளர்கள் இஎஸ்ஐ, பி.எப் மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; புதிய மோட்டார் வாகன சட்டத்தை  மத்திய அரசு வாபஸ் பெற வேண் டும்; பெட்ரோல் - டீசல் - கேஸ் விலை யை குறைத்து மானிய விலையில் வழங்க வேண்டும்; கொரோனா காலத்தில் வங்கியில் கடனை கட்ட இயலாதவர்களுக்கு கடனை முழு மையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தாமத எப்.சி.க்கு தினமும் 50 ரூபாய்  அபதாரம் விதிப்பதை கைவிட வேண் டும்; ஆட்டோ ரிப்லெக்டிங் ஸ்டிக்கர் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு மாநிலக் குழு செயலாளர் தேவா நிறைவுரையாற்றினார். வர வேற்புக்குழு பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.