திண்டுக்கல், ஜுலை 24- 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்றும், கூலி யை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரி சிஐடியு, விவசாயி கள் சங்கம், விவசாயத் தொழிலா ளர் சங்கங்கள் சார்பாக ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று திண்டுக்கல் ஆட் சியர் அலுவலகத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று சிஐடியு திண்டுக்கல் மாவட்ட மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. சிஐடியுவின் 11 ஆவது மாவட்ட மாநாடு திண்டுக்கல் மகாலிங்க நாடார் திருமண மண்டபத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடை பெற்றது. சனிக்கிழமையன்று மாலை நாகல்நகரில் பேரணியுடன் மாநாடு துவங்கியது. அரசு போக்கு வரத்து தொழிலாளர் அலுவலகத்தி லிருந்து மாநாட்டு கொடியும், சவேரி யார்பாளையத்திலிருந்து மாநாட்டு ஜோதியும் கொண்டுவரப்பட்டது. ஆர்.பால்ராஜ் கொடியேற்றினார். மாவட்டத்தலைவர் கே.பிரபாகரன் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் கே. பிச்சைமுத்து அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலக்குழு உறுப்பி னர் சோ.மோகனா வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகு மாறன், மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், மாநிலச்செயலாளர் பி.என்.தேவா ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்டச்செயலாளர் கே.ஆர்.கணேசன், பொருளாளர் ஏ.தனசாமி ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர்.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத் தலைவராக கே.ஆர்.கணேசன், மாவட்டச்செயலாளராக கே.பிரபாகரன், பொருளாளராக தவக்குமார் ஆகியோர் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். 42 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கைவிட வேண்டும். ஒன்றிய பாஜக அரசு 44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றியதைக் கை விட வேண்டும். திண்டுக்கல் மாவட்ட பஞ்சாலைகளில் இளம்பெண்கள் மர்மமான முறையில் மரணம் அடை வது மற்றும் விபத்து மரணங்கள், ஊனங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மீது காவல்துறை உரிய நட வடிக்கை எடுப்பதில்லை. திருமண சட்டம் என்ற பெயரில் தொழிலா ளர்களை சுரண்டும் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பஞ் சாலை பயிற்சி தொழிலாளருக்கு குறைந்தபட்ச சம்பளம் நாள் ஒன் றுக்கு ரூ.493 வழங்க வேண்டும். தொழிலாளர்கள் 12 மணி நெரம் வரை வேலை வாங்கும் அவல நிலை யை மாற்ற வேண்டும். பஞ்சாலை தொழிலாளர்கள் நிரந்தரம் செய் யப்பட வேண்டும். சட்ட சலுகைகள் வழங்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் மில், கமல்குமார் மில், சி.ஏ.வி.காட்டன் மில், அருணா டெக்ஸ்டைல்ஸ், பழனி வி.கே. திரட் மில், அண்ணா மலையார் மில், என திண்டுக்கல் மாவட்டத்தில் மூடப்பட்ட மில் தொழிலாளர்களுக்கு பணிக் கொடை, சம்பள பாக்கி, போனஸ், நஷ்டஈட்டுத் தொகை என எதுவும் வழங்கப்படாத நிலை உள்ளது. ஒன்றிய அரசின் நிவாரணமும் கிடைக்கவில்லை. உடனடியாக இந்த கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். டாஸ்மாக் ஊழி யர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. (ந.நி)