இராஜபாளையம், மே 21- இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி புதுத் தெரு தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான இடத்தை மோசடியாக வேண் டும் என்றே பதிவு செய்த கீழ ராஜகுலராமன் பத்திரப் பதிவு அலுவலரைக் கண் டித்து சிஐடியு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழராஜகுலராமன் சார் பதிவாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஞானகுரு தலைமை தாங்கினார். சிஐ டியு மாவட்ட துணைத்தலை வர்கள் ஜி. கணேசன், ஆர். சோமசுந்தரம், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பி னர் எம். முனியாண்டி உள் ளிட்டோர் பேசினர். சிஐடியு மாவட்ட தலைவர் எம்.மகா லட்சுமி கண்டன உரையாற்றி னார். ஆர்ப்பாட்டத்தில் ஜி. சக்திவேல் எஸ்.ஜீவானந்தம் மற்றும் ஊர் பொதுமக்கள் திர ளாக கலந்து கொண்டனர்.