திருப்பூர், நவ. 28- தினமும் எட்டு மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச மாத ஊதி யம் ரூ.28 ஆயிரம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என சிஐடியு பனி யன், பொது தொழிலாளர் சங்க 38 ஆவது தலைமை மகாசபை வலியு றுத்தியுள்ளது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நினைவகத்தில் திங்களன்று பனியன் பொது தொழிலாளர் சங்கம் மகா சபை சங்கத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சிஐ டியு மாவட்டத் துணைத் தலைவர் கே. உன்னிகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். பொருளாளர் அ.ஈஸ் வரமூர்த்தி வரவு செலவு அறிக்கை முன் வைத்தார். இதில் 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 28 ஆயி ரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண் டும், பனியன் தொழிலில் 16 மணி நேரம் உழைப்பை சுரண்டும் காண்ட்ராக்ட் முறையை முற்றாக கைவிட வேண்டும்,
தொழிற்பேட்டை கள் அமைக்க அதிக அளவில் நிதி ஒதுக்குகிற மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் பெண்கள் தங்கி பணியாற்ற ஹாஸ் டல் வசதிகளை ஏற்படுத்தி தர வேண் டும், பனியன் தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களின் சட்ட உரிமை களை அமல்படுத்த வேண்டிய தொழிற்சாலை ஆய்வாளர் அலுவல கம் செயலற்று கிடக்கிறது அவை முறையாக செயல்பட செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மகாசபையில் தலைவராக சி.மூர்த்தி, பொதுச்செயலாளராக ஜி. சம்பத், பொருளாளராக கே. நாகராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத்தலைவராக ஏ.ஈஸ்வர மூர்த்தி, எம்.பாண்டியராஜ், ஆர்.மாணிக்கம், சஹீனா, துணைச் செய லாளர்களாக சின்னசாமி, துரைமுரு கன், செல்வம், ராஜேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பனியன் தொழி லாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக சிஐடியு மாவட்ட செயலாளர் கே ரங்கராஜ் நிறைவு செய்து வைத்து உரையாற்றி னார்.