மதுரை, மே 29 - சிஐடியு மதுரை நகர் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 15 ஆவது மாவட்ட மாநாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க கட்டிடத்தில் மே 28 சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஆர். தெய்வராஜ் தலைமை வகித்தார். சங்க மாவட்ட பொதுச்செயலாளர் என். கனக வேல், பொருளாளர் கே. அறிவழகன் ஆகி யோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். மாநில துணைச் செயலாளர் முருகன் துவக்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் வீ. பிச்சை நிறைவுறையாற்றினார். மாநாட்டில் தலைவராக ஆர். தெய்வாராஜ், பொதுச் செயலாளராக என். கனகவேல், பொருளாளராக கே. அறிவழகன் உள்ளிட்ட 18 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அரசு ஆட்டோ தொழிலா ளர்களுக்கு பெட்ரோல் ,டீசல், கேஸ் ஆகியவைகளை மானிய விலை யில் வழங்க வேண்டும். மதுரை மாநகராட்சி நிர்வாகம் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட், ரயில் நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவை களில் ஆட்டோக்களுக்கு நுழைவு கட்டணம் பெறுவதை ரத்து செய்திட வேண்டும். ஆட்டோ ஸ்டாண்டுகள் அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கிட வேண்டும். ஆட்டோ தொழிலை பாதுகாக்க தமிழக அரசு கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் ராபிடோ, பிக்ஸி போன்ற ஆட்டோ சேவைகளை தடை செய்திட வேண்டும். ஒன்றிய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் தமிழக அரசு ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.