வெம்பக்கோட்டை, அக்.7- வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டியில் ஆட்டோ சங்க தகவல் பலகை திறப்பு விழா நடைபெற்றது. சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க தகவல் பலகை திறப்பு நிகழ்ச்சிக்கு வேலுச் சாமி தலைமையேற்றார். கிளை செய லாளர் ராமச்சந்திரன், கிளை பொருளாளர் வி.ரமேஷ், ஜெயசங்கர் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சாலைப் போக்குவரத்து சங்க வட்டாரத் தலைவர் ஆர். சுரேஷ்குமார் துவக்கி வைத்துப் பேசினார். கட்டுமான சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.பெரிய சக்கரை, ஒன்றியத் தலைவர் முத்துராம லிங்கம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் முனிய சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தகவல் பலகையை மாவட்ட பொதுச் செய லாளர் பி.என்.தேவா திறந்து வைத்து சிறப்பு ரையாற்றினார். மேலும் இதில் மணிகண் டன், சுப்புராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.