districts

img

திருவில்லிபுத்தூரில் கிறிஸ்துமஸ் விழா

திருவில்லிபுத்தூர், டிச.24- திருவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் சிஎஸ்ஐ துவக்கப் பள்ளியில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் அருள் தனராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை பிரைட்டி சிங் முன்னிலை வகித்தார். விழாவில், மாணவ, மாணவிகளின் நடனங் கள், கலைநிகழ்ச்சிகள், கிறிஸ்து பிறப்பு நாடகம் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப் பட்டன. தொடர்ந்து, பள்ளியில் மாணவ, மாணவியருக்கு புத்தா டைகள் மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில், உதவி குரு ஜெபராஜ் எபினேசர், சிஎஸ்ஐ பரிசுத்த பவுல் ஆலயத்தின் செயலர் மார்ட்டின் லூதர், பொருளாளர் தேவராஜ் மற்றும் பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முடிவில், உதவி ஆசிரியர் எஸ்தர் பொட்டு கன்னி நன்றி கூறினார்.