திண்டுக்கல், டிச.25- திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி யில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப் பள்ளி யில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஜெயா தலைமை வகித்தார். ஆசிரியர் ராஜ்குமார், ஆசிரியைகள் வெண்ணிலா, அமுதவள்ளி, சண்முகவடிவு, ஜுலியட் ஜெனிபர், தன்னார்வலர் உஷா மற்றும் அழகுசெல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.