districts

img

மானாமதுரையில் சித்திரை திருவிழா பணிகள் தீவிரம்

மானாமதுரை, ஏப்.6- மானாமதுரையில் 2 வரு டங்களுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் வைகையாற்றை சீர மைக்கும் பணி நடைபெற்று வரு கிறது.  வைகை ஆற்றங்கரையோ ரம் உள்ள ஆனந்தவல்லி அம் மன் கோயிலில் சித்திரை திரு விழா ஏப்ரல் 7முதல் கொடியேற் றத்துடன் துவங்க உள்ளது. வீர அழகர் கோயிலில் ஏப்ரல் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஏப்.14, தேரோட்டம் மற்றும் எதிர்ச்சேவை நிகழ்ச்சி ஏப்.15, அழகர் ஆற்றில் இறங்குதல் ஏப்.16, நிலாச்சோறு நிகழ்ச்சி ஏப்.17ல் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சிக்காக மானா மதுரை நகராட்சி சார்பில் வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடை பெற்று வருகிறது. பணிகளை மானாமதுரை நகராட்சித் தலை வர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் கண்ணன், சுகா தார ஆய்வாளர் தங்கதுரை, நகர செயலாளர் பொன்னுச்சாமி, நக ராட்சி சுகாதார மேற்பார்வை யாளர் பாலசுப்பிரமணியன், அலு வலக கண்காணிப்பாளர் கணே சன் ஆகியோர் மேற்பார்வையில் பணியாளர்கள் மேற்கொண்ட னர்.