districts

img

மானாமதுரை வைகையாற்றில் வீர அழகர் இறங்கினார்

மானாமதுரை, ஏப்.16- சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் நடந்து வரும் சித்தி ரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 16 சனிக்கிழ மையன்று வீர அழகர் வெண்பட்டு உடுத்தி வைகையாற்றுக்குள் இறங்கினார். ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்றனர். சிவ கங்கை தேவஸ்தான நிர்வா கத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரைத் திரு விழா நடைபெற்றது.  கள்ளழகர் வேடமிட்டு வந்த வர்கள் வீர அழகர் மீது தண்ணீ ரைப் பீய்ச்சி அடித்தனர். பின்னர் வைகையாற்றுக்குள் அமைக் கப்பட்டிருந்த ஏராளமான திருக்கண்களுக்குச் சென்று எழுந்தருளிய வீர அழகர் கடைசி யாக தனது கோயில் பின்புறம் ஆற்றுக்குள் நின்ற சப்பரத் தேருக்குச் சென்றடைந்தார். திரு விழாவை காண வந்த மக்களின் தாகம் தணிக்க மானாமதுரை பகுதி முழுவதும் ஏராளமான தண் ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டி ருந்தன. டி.எஸ்.பி தலைமையில் ஏராளமான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.மாவட்ட ஆட்சித்தலைவர் மது சூதன்ரெட்டி அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் பங்கேற் றார்.  மானாமதுரை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்ற துணைத்தலைவர் பால சுந்தரம் ,நகராட்சி ஆணையாளர் கண்ணன்,சானிட்டரி சுகாதார ஆய்வாளர் தங்கத்துரை, அலு வலக கண்காணிப்பாளர் கணே சன்,சுகாதரத்துறை மேற்பார்வை யாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள்,சித்திiரைத்திருவிழா சிறப்புற நடைபெற வைகை ஆற்றை சுத்தம் செய்து மேம்படுத்தினர்.