districts

img

கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்: சின்னாளபட்டி பேரூராட்சித் தலைவர்

சின்னாளப்பட்டி, மார்ச் 16-  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்பு நிலைப் பேருராட்சியின் முதல் கூட்டம் பேரூராட்சி கூட்டரங்கில் புதனன்று நடை பெற்றது. பேருராட்சி தலைவர் பிரதீபா கனக ராஜ் தலைமைத் தாங்கினார். துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா ,செயல் அலு வலர் நந்தகுமார் ஆகியோர்முன்னிலை வகித்தனர். பேரூராட்சியில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கவுன்சிலர் களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு யார் யாருக்கு என்னென்ன பபணிகள் கொடுக்கப் பட்டுள்ளது என்று தலைமை எழுத்தர் கலிய மூர்த்தி, துப்புரவு ஆய்வாளர் கணேசன் ஆகி யோர் ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்தி வைத்தனர்.  பின்னர் தலைவர் பேசுகையில், என் னென்ன பணிகள் அவரவர் வார்டுகளில் செய்ய வேண்டும் என்பதை கோரிக்கை மனுவாக எழுதிக் கொடுங்கள். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். தற்போது வார்டுக்கு 5 தெருவிளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வருங்காலங் களில் வார்டுக்கு எத்தனைத் தேவை என்று எழுதிக் கொடுத்தால் அது ஏற்பாடு செய்து  கொடுக்கப்படும் என்றார்.