மதுரை கீழவெளி வீதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் விளக்குத்தூண் காவல் நிலைய தலைமைக்காவலர் சரவணன் உயிரிழந்தார். டிசம்பர் 22 அன்று கிரைம்பிராஞ்ச் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.