வீரபாண்டியில் திருமண மண்டபம் - தங்கும் விடுதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
தேனி, ஏப்.6- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் திரு மண மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டு மானப்பணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, கட்டுமானப்பணியினை துவக்கி வைத்தார். தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி கௌமாரி யம்மன் கோயிலில் திருமண மண்டபம் ரூ.3.40 கோடி மதிப்பீட்டிலும், பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.1.16 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.4.56 கோடி மதிப்பீட்டிலும், தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சியம்மன் கோயி லில் திருமண மண்டபம் ரூ.3.30 கோடி மதிப்பீட்டிலும் கட்டு மானப் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொ லிக்காட்சியின் மூலம் அடிக்கல் நாட்டினார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கௌமாரி யம்மன் திருக்கோயில் திருமண மண்டபம் மற்றும் பக்தர் கள் தங்கும் விடுதி கட்டடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் தங்க தமிழ்செல்வன், திண்டுக்கல் மண்டல இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வெ.பாரதி, உதவி ஆணை யர் வே.சுரேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெக வீரபாண்டியன், வீரபாண்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கீதா சசி, முன்னாள் பேரூராட்சி மன்றத்தலைவர் இரத்தின சபாபதி அவர்கள், கோவில் மேலாளர் கு.பாலசுப்பிர மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில் உண்டியலை உடைத்து ரூ.40ஆயிரம் திருட்டு
சிவகாசி, ஏப்.6- சிவகாசி அருகே உள்ள வடமலாபுரம் ஸ்ரீநாரணம்மன் கோவில் உண்டியலை உடைத்து ரூ.40 ஆயிரம் பணம் திருடப்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது வட மலாபுரம். இங்கு ஸ்ரீநாரணம்மன் கோவில் உள்ளது. இதில் இராமமூர்த்தி என்பவர் பூசாரியாக இருந்து வரு கிறார். இவர், கடந்த ஏப்ரல் 4 அன்று வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். மறு நாள் காலை வந்து பார்த்த போது, கோவிலின் உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 40 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலை யத்தில் ராமமூர்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வரு கின்றனர்.
அனுமதியற்ற மதுக்கடையில் காட்டுப்பன்றி இறைச்சி 5 பேர் மீது வழக்கு
சின்னாளப்பட்டி, ஏப்.6- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட் பட்ட ஸ்ரீராமபுரம் பகுதியில் அனுமதி இல்லாமல் முத்துப் பாண்டி என்பவர் மதுபானங்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கன்னிவாடி வனத்துறையினர் மற்றும் விரைவுப்படை யினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அதிரடி யாக மதுபான கடையில் நுழைந்து பன்றி இறைச்சியை கைப்பற்றினர். மேலும் அங்கிருந்த ஐந்து நபர்களை விசா ரணைக்காக கன்னிவாடி வனத்துறையினர் அழைத்து வந்து, விசாரணை நடத்தினர். இதில் காட்டு பன்றியை கொன்று அதன் இறைச்சியை அனுமதியில்லாத மதுபான கடையில் வைத்திருந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். கடையில் இருந்த கன்னிவாடி அருகே தெத்துப்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார், பிரபாகரன், செல்வம், பண்ணப்படி யை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வீரப்புடையான்பட்டி யை சேர்ந்த அய்யப்பன் ஆகிய 5-பேர்கள் மீது கன்னி வாடி வனத்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. அரசு அனுமதியில்லாமல் மதுபான கடை நடத்தி வந்த ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டியை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.
வட மாநிலத்தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ யூ டியூபர் மனீஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது
மதுரை, ஏப். 6- தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படு வது போன்று சமூக ஊடகங்களில் போலி வீடியோ பீகா ரைச் சேர்ந்த மனிஷ் காஷ்யப் என்பவரை பீகார் காவல் துறை கைது செய்தனர். இந்நிலையில் போலி வீடியோக்களை வெளியிட்டது தொடர்பாக மதுரை ஊரகக்காவல் துறையிலும் வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு அந்த நபரை தேடி வந்தனர். பீகா ரில் அந்த நபர் பிடிபட்டதை தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் பீகார் சென்று மனிஷ் காஷ்யபை அழைத்து வந்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திடம் அனு மதி பெற்று போலீஸ் காவலிலும் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனிஷ் காஷ்யப், தேசிய பாதுகாப் புக்கு குந்தகம் விளைவித்ததால், அவரை தேசியப்பாது காப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி , மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மனிஷ் காஷ்யப் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்ப்பட்டார். இதுதொடர்பாக ஆட்சியரின் உத்தரவு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனிஷ் காஷ்யபிடம் வழங்கப்பட்டது.
கண்ணகி கோவில் சித்திரை திருவிழா தேனி ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம்
தேனி, ஏப்.6- தமிழ்நாடு -கேரளா எல்லையில் கூட லூர் அருகே அமைந்துள்ள கண்ணகி கோவில் சித்திரை திருவிழாவை முன் னிட்டு தேனி ஆட்சியர் தலைமையில் ஷஜீவனா தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. கூடலூர் அருகே தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருவிழா கொண்டாடப்பட்டு வரு கிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா மே மாதம் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா முன்னேற்பாடு பணி கள் குறித்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்ரீவில்லி புத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி மற்றும் அரசின் பல்வேறு துறை அலு வலர்கள், கண்ணகி கோவில் அறக்கட் டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், ‘கோவிலுக்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்லக் கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட் கள் எதையும் கொண்டு செல்லக்கூடாது. 5 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் மட்டும் அனு மதிக்கப்படும். தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் மேற் கொள்ளப்பட வேண்டும். வன விலங்கு களால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படா மல் தடுக்க இருமாநில வனத்துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கீழடி அருங்காட்சியகத்திற்கு வாரத்தில் வெள்ளிக்கிழமை விடுமுறை
மாவட்ட ஆட்சியர் தகவல்
சிவகங்கை, ஏப்.6- கீழடி அருங்காட்சியகத்திற்கு வரு கின்ற ஏப்ரல் 14 அன்று வெள்ளிக் கிழமை முதல், பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறையாகவும் மற் றும் தேசிய விடுமுறை நாட்களிலும் விடு முறை அறிவித்து, தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது என்று மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ப. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் ஊராட்சி ஒன்றியம், கீழடியில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சிவ கங்கை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கின்ற வகையிலும், தமி ழகத்தின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறுகின்ற வகையிலும், புதி தாக கட்டப்பட்டுள்ள கீழடி அருங்காட்சி யகம் தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த மார்ச் 5-ஆம் தேதி திறந்து வைக்கப் பட்டது. தற்போது வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயங்கி வரும் கீழடி அருங் காட்சியகத்திற்கு, சுற்றுலா, பண்பாடு (ம) அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டின் கீழ் இயங்கி வரும் மற்ற அருங்காட்சியகங்களில் பின்பற்றப் படும் நடைமுறைகளை, கீழடி அருங் காட்சியகத்திலும் பின்பற்றிடும் பொருட்டு, பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறையாகவும் மற் றும் தேசிய விடுமுறை நாட்களில் விடு முறை அளித்தும் அரசால் ஆணை பிறப் பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வார விடுமுறையாகவும் மற்றும் தேசிய விடுமுறை நாட்களான ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களிலும் விடுமுறை அளித்தும் ஆணையிடப் பட்டுள்ளது. எனவே, கீழடி அருங்காட்சியகத் திற்கு வார விடுமுறையான பிரதி வெள் ளிக்கிழமை மற்றும் மேற்கண்ட தேசிய விடுமுறை நாட்களை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அரசால் மேற் கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு நல்கிடுமாறு ஆட் சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.